About Us

1962இல் தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் 9 - ஆம் வகுப்பு தொடங்கப்பட்டது. ஊர் நலன் வளர்ச்சிக் கழக படிப்பகத்தின் ஒரு பகுதியில் தலைமை ஆசிரியர் அலுவலகமும் , ஒரு பகுதியில் 9 - ஆம் வகுப்பும் இயங்கின . 1963 -இல் உயர்நிலைப் பள்ளி தொடக்க விழா சிறப்பாக நடைப்பெற்றது. முதலமைச்சர் காமராசர் தலைமை ஏற்று தொடக்கி வைத்தார் .முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் கலந்து கொண்டார்.

 

ஊர் நலன் வளர்ச்சிக் கழகத்தினரின் கடும் உழைப்பு, தளரா முயற்சி , பெற்றோர் ஆசிரிய கழக சார்பில் வசூலித்த நன்கொடை போன்றவை கொண்டு கீற்றுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.தரையில் அமர்ந்து மாணவர்கள் பயின்றனர் , ஆசிரியர்களுக்கு நாற்காலி மட்டுமே. 

 

பள்ளி சிறப்பு 

   1964வாக்கில் திரு சே .தங்கராசன் . தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றார் 

பதினைந்து ஆண்டுகளில் அவரின் அயரா உழைப்பும் அர்பணிப்பும் பள்ளியின்

சிறப்பான வளர்ச்சிக்கு ஆக்கமளித்தன.  கல்வி மாவட்டத்தில் பள்ளி முன் வரிசையில்

வரும் அளவிற்கு மாணவர் சேர்க்கையும் கல்வி தரமும் உயர்ந்தன

   தொடர்ந்து பள்ளி இறுதி பொது தேர்வுகளில் 90 முதல்  100  விழுக்காடு வரை தேர்ச்சி பெற்றனர்

    இன்று போல் அந்நாளில் வகுப்பறை வசதிகள்,   ஆய்வகம்,   நூலகம்,  அலுவலகம்

   விளையாட்டுத்திடல் போன்ற எந்த வசதியும் இல்லா நிலையில் தளராத ,  தன்னலமற்ற

பணியால் பள்ளியை தொய்வின்றி நடத்தி வெற்றி கண்டார்

 

மாணவர் விடுதி  

 

14.11.1975 இல் பண்டித நேரு பிறந்த நாளான குழந்தைகள் தினத்தன்று ஆதிதிராவிடர் இல்லம் தொடங்கப்பட்டது. இன்று பதினைந்து இலக்கத்தில் கட்டடம் அமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் கொண்டதாக மாணவர் இல்லம் இயங்கி வருகின்றது 


Create a free website Webnode