உறந்தை பள்ளி இணையம் உங்களை அன்போடு அழைக்கின்றது
என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞா னத்தால்
, பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இமயம லைபோல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
..... இயம்ப கேட்கவே
நஞ்சையும் , புஞ்சையும் கொஞ்சி விளையாடும் பகுதியான உறந்தைராயன்குடிக்காட்டில் 1962 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கர்மவீரர் கு.காமராஜர் அவர்களால் அரசு உயர்நிலைப் பள்ளியாக தொடங்கி இன்று மேனிலைப் பள்ளியாக உயர்ந்து கிராமப்புற மாணவச் செல்வங்களுக்கு கேடில் விழுச் செல்வத்தை அளித்து வருகிறது
இத்தகைய சிறப்பு மிகு கல்வி நிறுவனத்தின் பணிகளை விவரிக்கும் இணையதளத்திற்கு உங்களை அழைத்து செல்வதில் பெருமையடைகிறது
...வளருகின்ற இந்தியாவை, வளர்ந்த இந்தியாவாக மாற்ற உறுதியெடுப்போம் ! உயர்த்துவோம் !! உயர்வோம்